Friday 11 October 2013

நான்கு கால்களின் பயணத்தின் போது......


இரவின் ஆர்ப்பாட்டம்
வெண்ணிறக் கள்வன் பின்
தொடருகையில்
காலாற பயணம் மேற்கொண்டன
நான்கு கால்கள்

பௌர்ணமி வெளிச்சத்தில்
பளிச்சென மின்னியது
தங்கமன்று - அது
பருவ நங்கையின்
பால் வண்ண மேனி

நெருக்கத்தில் நெருங்கி இருந்தது
கைகளின்றி நெஞ்சமும் தான்
சிறு சிறு சில்மிசங்களால்
வெட்கத்தில் வியர்க்கிறாள்
வெள்ளி வண்ண தேகம்
அந்த வாடைக்காற்றிலும்

துணைவன் உடன் இருக்கையில்
துரத்திப் பிடிக்க நினைத்து
காதலிக்கும் கள்வனுக்குப் போட்டியாக
கண்ணடித்து காதலிக்கும் முயற்ச்சியில்
விண்ணின் மைந்தர்கள்

No comments:

Post a Comment