வாய்க்க வரப்போரம்
வண்டி உருளும்
ஒத்தையடி பாதையோரம்
அள்ளி முடிஞ்ச கொண்டையிலே
அரை மனச கொண்டு போறவளே...
அன்னனடையழகி
அமுதவாய் மொழியழகி
ஆச மச்சான் கேக்குறேன்
அலுங்காம குலுங்காம
சொல்லிபுடு...
அத்தன அழகையும்
எங்க பதுக்கி வச்சிருக்க...
முந்தான சொருகையிலே
கையை முத்தமிடும்
இடுப்போரமா..?
மூச்சு முட்டி
முன்னழக கூட்டி
என்ன முறைச்சு பாக்குற
முசகுட்டி காது மடிப்போரமா..?
கர கட்டுன கண்டாங்கி சேல
கெண்டைக்கால காட்டுதடி
இறுக்கி புடுச்ச மாராப்பு
ஏ இறுமாப்ப கூட்டுதடி
நீ பொட்டு வச்ச இடத்துல
முத்தமிட தோணுதடி
உன்ன மாரோடு சாச்சுகிட்டு
மாந்தோப்பு பூந்தோப்புன்னு
சுத்திவர மனம் ஏங்குதடி for continue reading...
அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
No comments:
Post a Comment