Saturday 7 June 2014

என் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

10 -02-2014 அன்று எனது கல்லூரித் தோழியின் திருமணத்திற்கு சென்று வந்து மீண்டும் கரூர் திரும்புவதற்காக ஈரோடு காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பரும் கரூர் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தோம்.அப்பொழுதுதான் அந்த நிகழ்வு நடந்தது..

நேரம் மதியம் 2 மணி. ஈரோடு கதிரவனின் தாக்குதலில் துவண்டு கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்க பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்த நிழற்குடை மற்றும் மர நிழலில் பதுங்கிக்கொண்டிருந்தனர். தொடர்வண்டி நிலையத்திலிருந்து வந்த நானும் எனது நண்பரும் அந்த வெயிலிலும் தேநீர் குடிக்கலாம் என்று நிழற்குடை அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைக்குச் சென்றோம். இருவரும் குளம்பி ( குழம்பிடாதீங்க காபியைத் தான் சொன்னேன்) குடிக்க முடிவெடுத்து, குடித்தும் விட்டோம். பிறகு அதற்க்கான தொகையை கொடுத்தப் பின்னர் ஊர் கதை பேச ஆரம்பித்தோம்.

அன்றைய மறுநாள் எனக்கு பண்பலையில் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இருந்ததால் அதற்க்கு தயாராவதற்கு முன்னோட்டமாக அன்றைய தினம் நிகழ்ச்சித் தலைவர் பங்குபெற்ற நிகச்சியை கேட்டுக்கொண்டே பேச முற்பட்டோம் இருவரும்.

அயிந்து நாளிகை கடந்தது.. 
  என் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

No comments:

Post a Comment