Monday 18 November 2013

விழியிலாக் கனவு



கண்கள் கலங்கிய பொழுது
கண்ணீரும் இல்லையடி
காலமும்தான் கரைந்ததடி
கன்னி உந்தன் நினைவினிலே

கரைந்த காலமெல்லாம்
பனிப்பாறையாய் நின்றிட
பருவமே உந்தன் பாசம் மட்டும்
பாறையில் பொறித்ததாயிற்றே
இந்த இளகியவன் நெஞ்சினிலே


விழியின்றியே 
விண்ணுலகம் வரை 
கனவு காண்கிறேன் 
நான்....


காதல் உளி கொண்டு
எனைக் கடைந்தெடுத்தவளே
நீ பறித்துச் சென்ற 
விழிகளை மட்டும் 
இறுதிவரை தரவேயில்லை 

No comments:

Post a Comment