Saturday 2 November 2013

நீ எந்தன் தாய்மையாக...

 நான் எத்தனை முறை 
உன்னால் அவமானப்படுத்தப்பட்டாலும்
ஆறுதல் தேட
உன் மடித்தேடியே
பயணிக்கிறது
என் மனம்...


உனது இலவம்பஞ்சு
விரல்களால் 
என் மார்பை 
கிழித்தப்போதும்
உன் மார்பின் 
அரவணைப்பிற்க்காகவே
அங்கலாயிப்பு கொள்கிறது
என் மனம்...

என் காதலை உதறிய
உனது கைகளையே
என்றும் பற்றிக்கொள்ள
ஏங்குகிறது
என் மனம்...

உன்னைச் சுற்றும்
குழந்தையாக...

நீ எந்தன் 
தாய்மையாக...

No comments:

Post a Comment