Saturday 2 November 2013

தேடலில் என் மனது....


தனிமையின் புலம்பலில்
தறிகெட்டு ஓடுகிறது
உந்தன் நில்லாத
நினைவுகளும்
நீடுயிர் காதலும்

காலில் இருந்து
ஒலிக்கும் கொலுசு
ஒலி மட்டும் தான்
என் காதினில்
பயணிக்கிறது

உன் பூப்பாதங்களை மட்டுமே
இக்குருடனின் கண்கள்
காண்கின்றன

கூந்தல் கொண்ட பூக்களும்
கூத்தாடி மகிழ்கிறது
உன்னை உடுத்திக்கொண்ட
சேலையும் சோலையாய்
சிரிக்கிறது

கூட்டத்தில் தனித்த
சிறு குழந்தை
தன் தாயின்
ஆள்காட்டி விரலை
தேடித் தேடி
அலைகிறது

மனப்பக்குவம் மறந்த
என் மனது....

No comments:

Post a Comment