உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக
என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக
என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும்
உந்தன் ஈராக் கூந்தலுக்காக
உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக
பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக
என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக
சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக
உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்
உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக
காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக
கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக
காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்
உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக
பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக
என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக
சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக
உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்
உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக
காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக
கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக
காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்
No comments:
Post a Comment