விடிந்தும் விடியாத
காலைப் பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த
அந்த
அதிகாலை நேரத்தில்
கோலத்தின் நடுவினிலே
பாதி மலர்ந்தும் மலராத
கோலத்தின் நடுவினிலே
பாதி மலர்ந்தும் மலராத
மலர் அது
கடலின் மடியில் பிறப்பெடுத்து
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல
கடலின் மடியில் பிறப்பெடுத்து
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல
உன்
முகம் நான் காண ....
அதோ... அதோ...
தூரத்திலுள்ள
அந்தக் குட்டிச் சுவரின் மறைவில்
நான்
மறைந்து நிற்கையிலும்
பாதி முகம்
காட்டிய
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த
உன் முகம்
தெரிந்தும் தெரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது
உட்கார்ந்து கொண்டது
என் கண்களுக்குள்...
No comments:
Post a Comment