கள்ளத் தன்மை
நகைப்பினில் கொண்டிருப்பினும்
இதழோரம் வழியும்
எச்சில் தீர்த்தத்திற்கு
ஆதிப் பொருளானவன்
ஏங்கிக் கொண்டிருந்த வேளையிலே
இறைவனின் இன்புலகமாய்
அந்தப் பிஞ்சு மொழிச்
சாரலுக்கு..
இசைக் கீற்று
அமைத்துக் கொண்டிருந்தது
அச் சிறுகுழந்தையின்
பாதக் கொலுசு
பாதக் கொலுசின்
பஞ்சார்த்தனையில்
காலடி சரணாகதி
வேண்டி நிற்கிறான்
திருமூலமான அவன்...
No comments:
Post a Comment