Friday 11 October 2013

அந்தப் பாதக்கொலுசு

கள்ளத் தன்மை
நகைப்பினில் கொண்டிருப்பினும்
இதழோரம் வழியும்
எச்சில் தீர்த்தத்திற்கு
ஆதிப் பொருளானவன்
ஏங்கிக் கொண்டிருந்த வேளையிலே
இறைவனின் இன்புலகமாய்
இயங்கிக்கொண்டிருக்கும்
அந்தப் பிஞ்சு மொழிச்
சாரலுக்கு..
இசைக் கீற்று
அமைத்துக் கொண்டிருந்தது
அச் சிறுகுழந்தையின்
பாதக் கொலுசு

பாதக் கொலுசின்
பஞ்சார்த்தனையில்
காலடி சரணாகதி
வேண்டி நிற்கிறான்
திருமூலமான அவன்...

No comments:

Post a Comment