நீ கொன்ற அந்தத் தருணம்...
குப்புற விழுந்தவனை
வாரி அணைக்க நீ
வருவாயென
மண்ணோடு மன்றாடி படி
இருந்தேன்; வந்தாய்;
வாரி அணைக்க அல்ல
வாரி இறைக்க
என் சவக்குழியில்
நான் முத்தமிட்ட
அதே
மண்ணோடு...
என்னவென்று புரியாமல்
திரியும் என் காதலுக்கு
என்னவென்று சொல்லி
புரிய வைப்பேன்
நீ கொன்றுவிட்டுப் போன
அந்தத் தருணத்தை....
No comments:
Post a Comment