Friday 11 October 2013

நீ கொன்ற அந்தத் தருணம்...

குப்புற விழுந்தவனை
வாரி அணைக்க நீ
வருவாயென
மண்ணோடு மன்றாடி படி
இருந்தேன்; வந்தாய்;
வாரி அணைக்க அல்ல
வாரி இறைக்க
என் சவக்குழியில்
நான் முத்தமிட்ட அதே
மண்ணோடு...

 

என்னவென்று புரியாமல்

திரியும் என் காதலுக்கு

என்னவென்று சொல்லி

புரிய வைப்பேன்

நீ கொன்றுவிட்டுப் போன

அந்தத் தருணத்தை....

No comments:

Post a Comment