உண்மையும்
பொய்யாகும்
பொய்யும்
உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம் வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக் குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும் பார்க்கலாம்
கருநிற முகமும் கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும் கவர்ச்சியாகப் படலாம்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம் வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக் குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும் பார்க்கலாம்
கருநிற முகமும் கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும் கவர்ச்சியாகப் படலாம்
கல்லாதவனும் கவி படைப்பான் - அதில்
காட்சியெல்லாம் அவளே என்பான்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம் தள்ளப்பட்டவனுக்கும்
காட்சியெல்லாம் அவளே என்பான்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம் தள்ளப்பட்டவனுக்கும்
No comments:
Post a Comment