Friday 18 October 2013

பருவ நங்கையின் நகையோ காரணம்...




நாத்து நடப் போகையிலே - பெண்கள் 
நயமாய் குழவு போடுகையிலே
கிளி கொண்ட கிலியினால்
கிணத்து மேட்டுல அமர்ந்திருக்க;

ஒத்த வேட்டி கட்டிக்கிட்டு
அவரு ஓயாமல் வேலை செஞ்சுகிட்டு
வியர்வைத் தண்ணி
நிலத்தில் விழுந்து
வித்தாக மாற;

கடலின் அடியில் இருக்கும்
கனவு முத்து
மாமன் தோளில்
முத்தமிட்டுருக்க;

கழனி பூமியில்
பூத்திட்ட
செந்தாமரையாய்
மங்கை அமர்ந்திருக்க;

கொக்குகளும்
தன் ஒற்றைக் காலில்
தவமிருக்க;

பருவ நங்கையின்
நகையோ காரணம்
படை நடுங்க வைக்கும் இவன்
பாதாள உலகினில் வீழ...

No comments:

Post a Comment