குளத்துத் தவளை
கானம் பாடும்
வேளையிலே
செஞ்சூரியன்
செவ்வானம் காட்டி
மறைகையிலே
நிலவானவள் நீலவானம்
செல்கையிலே
மார்பின் நடுவினிலே
அமர்ந்துக் கொண்டு
கள்வன் அவன்
மோகத்தீயில் மூழ்கடித்தான்
வாரி அணைக்க
நினைக்கையில்
வானம் போல் எட்டி
நின்று
ஏளனமும் செய்கின்றான்
என் வீட்டின் முகட்டில்...
No comments:
Post a Comment