Friday 11 October 2013

வாலிபத்தின் வஞ்சகமே...





என்னைத் தலைவனாக ஏற்காத நீ
இன்று தலைவராகவே மாற்றிவிட்டாய்
எனது இறந்த நாளைக் கொண்டாடி
உன் திருமண நாளாக...

பூக்கள் உன் மீது வாழ்த்துகளாகச் சொரிய
என் மீது சருகுகள் மட்டுமே
சாயவருகின்றன

என் கல்லறையும் கசிந்து உருகுகிறது ;
உன் மணக்கோலத்தில்
நீ கொண்டிருந்த மலர்கள்
சூட்டியவனின் கைகளாலேயே
காய்ந்து கருகிய அந்தத் தருணத்தை
எண்ணி... எண்ணி...




நான் உருகிய பொழுதெல்லாம்
உருகாமல் மெருகேறியது என்னவோ
உன் எண்ணமும் உருவமும் தான்
நீ அணிந்திருந்த...
அந்த பட்டுப்பாவாடையும்
காதோரச் சிமிக்கியும்
அவ்வப்பொழுது காற்றினில்
அசைந்து அசைந்து
தாலாட்டிக் கொண்டிருந்தது

நம் காதலை...

No comments:

Post a Comment