Wednesday 30 October 2013

சின்னச் சின்ன துளிகள்




கரை மோதும்
கடலலைகள்
காதலின் ஊடல்கள்




பூக்களுக்குள்ளும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மகரந்தத்தூள்




மூச்சு முட்டக் குடித்தப்பின்
போதையில் கிறுக்குகிறான்
தாளில் கவிதைகள்
எழுதுகோல்




தாலாட்டுக் கீர்த்தனைகளுடன்
தலை சாயிக்க மடிதந்தாள் தாய்
பேருந்தின் சன்னலோரம்




ஓராயிரக் கனவுகளுடன்
ஓரங்க நாடகங்கள் உன்னுடன்
கண் மூடிய வேளையிலே




ஆடம்பரம் இல்லாத கலைக்கூடம்
வெந்தாமரையில் சரஸ்வதி
சாலையோர ஓவியம்

No comments:

Post a Comment