Friday 25 October 2013

இருதயம் சொன்னது...

நீ...
உன் ஏளனப் பார்வையை
என் மேல் எறிந்துவிட்டு
ஏகாந்தாமாய் திரும்பிய போது
அது வரை இமைக்காமல் பார்த்த
கருவிழிகள் இரண்டும்
தன்னிலை மறந்து
மாறாக கண்ணீர் விட்டு
ஆறாகப் பெருக்கெடுக்க
மாறியது என்னவோ
மங்கை உனது
காதல் மட்டுமே...

ஆறியது என்னவோ
நீ தந்த காயங்கள் மட்டும்;
இறுதிவரை நிலைபெற்றதோ
நீ தந்த வடுக்கள் மட்டும்;

சுவடுகள் தாங்கிய இருதயமும்
சொன்னது
சுருண்டு விடாதே
என்னவனே !
அவள் சுண்டு விரல் தீண்டிய
தருணம் இருக்கிறது
நீ இன்னும்
உயிர் வாழவென்று

No comments:

Post a Comment