கூற்றுவனே....
பாவப்பட்டவர்கள் இறந்தப் பின்
செல்வது நரகத்திற்கா ?
நாங்கள் என்ன பிறந்ததே பாவமா ?
நரகத்தில் வாழ...
இப்புவியில் வந்துப் பார்
சொர்க்கமென்று நீ நினைத்திருக்க
நரகமென்று நாங்கள் வாழ்ந்திருக்க
பாசக்கயிறை நீ நீட்டியிருக்க
பாசத்தால் நாங்கள் கயிறாய் பிணைந்திருக்க
எருமை வாகனத்தில் நீ அமர்ந்திருக்க
எருமைப்போல் நாங்கள் வாழ்ந்திருக்க
எட்டாத உயரத்தில் நீ வீற்றியிருக்க
குழியேட்டும் தூரத்தில் நாங்களும்
நிலைத்திருக்க
என் தாய்திரு நாட்டில் இன்னும் அகலவில்லை
வறுமை...
No comments:
Post a Comment